மதுரை: ஸ்டாலின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? அவரது சொத்துக்கள் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மத்திய அரசு ஹிந்தியை நம் மீது திணிக்கமுயற்சி செய்யக்க்கூடாது. அவ்வாறு செய்ய முயன்றதன் காரணமாகதான் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை இழந்தது. அதிமுக அரசு ஹிந்தி திணிப்பை அனுமதிக்காது.
தமிழக அரசு பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் குறை கொண்டே இருக்கும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? அவருக்கு கார் உள்ளிட்ட சொத்துக்கள் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் ஆட்சிதான் நடக்கும்; மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படும்.
நாங்கள் முன்பே கூறியது போல அதிமுக ஆட்சியானது யாருக்கும் அடிமையும் இல்லை; அரசனும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.