69 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கைச் சிறையில் உள்ள 69 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைச் சிறையில் உள்ள 69 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது மட்டும் போதுமானது இல்லை. இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தற்போது இலங்கைச் சிறையில் உள்ள 69 தமிழக மீனவர்களையும், இலங்கையின் வசம் உள்ள அனைத்து விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com