சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது என்று நாம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், குறிப்பாக வட சென்னைக்கு தான் அந்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, சென்னையில் ஜூன் 6,19, 23 ம் தேதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்தன. அதே மாதிரி நல்ல மழை பெய்ய வேண்டும் என்றால் தென் மேற்கு பருவ மழை பலவீனம் அடைய வேண்டும். ஆனால் இப்போது கேரளாவில் பருவ மழை நன்றாக பெய்து வருகிறது. அதனால் பெரிய மழையை சென்னையில் எதிர்பார்க்க வேண்டாம். சிறய மழையாக இருக்க வாய்ப்பு உண்டு.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருவது நமக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும். தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் தான் அணைகளுக்கு நீர் வரும். விவசாயிகள் சந்தோஷம் அடைவர். ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் பருவ மழை பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. அப்போது சென்னைக்கு மழை வாய்ப்பு உண்டு.
லேசான மழையாக இருந்தாலும் அனுபவியுங்கள். வட சென்னைக்கு தான் அதிக வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்.