ஆம்பூரில் பள்ளி மாணவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் லோகேஷ்குமார் (18). இவர், ஆம்பூரில் உள்ள பள்ளியில் 12}ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 24}ஆம் தேதி லோகேஷ்குமார், தன்னுடைய வீட்டின் பின்பக்கம் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஆம்பூர் நகர போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.