சென்னை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை துடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைமைச் செயலகத்தில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை சந்தித்தனர்.
சந்திப்புக்கு பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம். எனவே அப்பகுதி விவசாயிகள் யாரும் அச்சப்பப்படத் தேவையில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.