வீட்டில் பதுக்கிய ரூ. 3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி செம்மரக் கட்டைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல்செய்தனர்.

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி செம்மரக் கட்டைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல்
செய்தனர்.
பொன்னேரி வட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எடப்பாளையம், நாகாத்தம்மன் நகரில் உள்ள வீடு ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சந்தேத்துக்கிடமான வகையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் எடை கொண்ட செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 3 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை போலீஸார் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிந்து செம்மரக் கட்டை பதுக்கி வைத்த நபர் குறித்து விசரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com