கோவை மாவட்டம், வால்பாறை அருகே காபி தோட்டத்தில் 27 வயதுடைய காட்டெருமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்த அணலி எஸ்டேட் காபி தோட்டத்தில் உள்ள 7-ஆம் டிவிஷனில் காட்டெருமை இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வால்பாறை வனச் சரகர் சக்திவேல், வனவர் சந்திரன், கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் ஆகியோர் அந்தக் காட்டெருமையின் சடலத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து, அந்தக் காட்டெருமையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், அதே பகுதியில் புதைக்கப்பட்டது.