முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் மறைவுக்கு, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மெய்யப்பன், பாலையா, இரா.வில்வநாதன், செல்லையா ஆகியோர் மறைவுக்கு பேரவைத் தலைவர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சிறிது நேரம் மெளன அஞ்சலி செலுத்தினர்.