புதுதில்லி: ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று புதன்கிழமை இரவு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரு அணிகளும், தங்களுக்கான கட்சியின் பெயரையும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 85 சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்து இன்று வியாழக்கிழமைகாலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சி உள்ளனர்.