குமரி அருகே கார்- வேன் மோதி விபத்து: 4 கல்லூரிமாணவிகள் பலி; 15 பேர் படுகாயம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
குமரி அருகே கார்- வேன் மோதி விபத்து: 4 கல்லூரிமாணவிகள் பலி; 15 பேர் படுகாயம்!

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது புலியூர்குறிச்சி. அங்கே இன்று மாலை கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று எதிரே வந்த காருடன் நேருக்கு நேராக மோதியது. இதில் வேனிலிருந்த தீபா, சிவரஞ்சனி மற்றும் மஞ்சு உள்ளிட்ட நான்கு கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலே பலியாகினர்.

பலத்த காயமடைந்த மேலும் 15 பேர் அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com