இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கார் ஓட்டுநர் சந்தோஷ் உட்பட இருவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து தேவகோட்டைக்கு கொண்டு செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ 5 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.