அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஏற்கெனவே 3 முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரின் மனைவி ரம்யாவை நேற்று ஆஜராகும்படி வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். நேற்று ஆஜராக வேண்டிய ரம்யா, அவகாசம் கேட்டதையடுத்து இன்று ஆஜரானார்.