சென்னை: ஊழலை பற்றிப் பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள கண்ணகி திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, சேவூர் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அம்மாவின் ஆட்சி நான்காண்டு காலம் தொடர வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும் வகையில், கழகத்தில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் அணிக்கு சென்றவர்கள் மீண்டும் கழகத்திற்கு வந்தால், அம்மா அரசு மற்றும் கழகம் உரிய முக்கியத்துவம் வழங்கும் என தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு பற்றி பேச திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்.