தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல கடந்த ஆண்டைக் காட்டில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சியடைந்துள்ளனர்.
பிளஸ் 2-வில் 94.5 சதவீத மாணவிகளும், 89.3 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு 0.7 சதவீத அளவு தேர்ச்சி அதிகரித்துள்ளது.