கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 7 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இனைவரும் வேளாங்கண்ணி சென்று ஊர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.