அரக்கோணம்: சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்பட பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நுழையும் போது ரயில் எஞ்சின் உள்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ரயிலில் பயணித்த தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் உள்பட பயணிகள் அனைவரும் காயமின்றி அதிரிஷ்டவசமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ரயில் மிக குறைந்த வேகத்தில் சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், ரயில் தடம் புரண்டதற்கு ரயில் தண்டவாளத்தில் உள்ள இடைவெளி காரணமாக கூறப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகளின் மேற்பார்வையில் பழுதை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.