சென்னை: கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிரபல பிராண்ட்களின் தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமான காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முறையாக வருமானவரி சோதனை செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை உள்ளிட்ட நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் பல குழுக்களாக நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.