நன்மங்கலம் வனப் பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு

நன்மங்கலம் வனப்பகுதியை விரைவில் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வனத் துறை வனவியல் விரிவாக்க அலுவலகம் சென்னை மாவட்டம் நன்மங்கலம்.
தமிழ்நாடு வனத் துறை வனவியல் விரிவாக்க அலுவலகம் சென்னை மாவட்டம் நன்மங்கலம்.

நன்மங்கலம் வனப்பகுதியை விரைவில் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிதான் நன்மங்கலம். நன்மங்கலம் வனப் பகுதியின் மொத்த பரப்பளவு 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
பறவை ஆராய்ச்சி ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்பட்ட இந்த வனம் 85-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் புகலிடமாய் விளங்குகிறது.
மேலும் பல அரிய வகைப் பறவைகளும் இங்கு வந்து செல்வதாக ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
நகர்ப்புறத்தில் அமைந்துள்ள இந்தப் பாதுகாக்கப்பட்ட காடு ஒரு கைவிடப்பட்ட கல் குவாரி இடமாகும். இப்போது இந்த வனப்பகுதியை சூழல் சுற்றுலாவுக்கு பொது மக்களை விரைவில் அனுமதிக்க அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத் துறை மேற்கொள்ளவுள்ளது.
அழிப்பு: 320 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கும் நன்மங்கலம் வனப்பகுதியில் முன்பிருந்த யுரேஷியன் பருந்து ஆந்தைகள், சூரியப் பறவைகள், 400 க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள் மற்றும் பூச்சியுண்ணும் தாவர வகைகள் இருந்தன.
ஆனால் 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை இங்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பசுமைப் புரட்சிக்கும் பிறகான காலகட்டத்தில் இந்தியாவுக்குள் அதிகமாக ஊடுருவத் தொடங்கிய கருவேல மரங்கள் மற்றும் தைல மரங்களின் பெருக்கம் நன்மங்கலம் காடுகளில் மட்டுமே வளரும் சிறப்பான சில நாட்டு வகை தாவர இனங்களை முற்றிலும் அழித்துவிட்டன.
கல் குவாரிகள்: இந்த வனப்பகுதியில் இருக்கும் ஏழு பெரிய கல்குவாரிகளாலும் நன்மங்கலம் வனத்தின் இயற்கை எழில் குறையத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு இந்த வனப்பகுதி தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் குவாரிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு மரங்களை வெட்டக் கூடாது, இயற்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது, வனத்தின் பசுமையை சீரழிக்கக்கூடாது என சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நன்மங்கலம் வனப்பகுதி மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் எனும் இரண்டு படிநிலைகளைக் கொண்ட வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தப் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பூமியில் நீர் உறிஞ்சும் மரங்களை அகற்றுதல், குவாரிகளுக்கு சுரங்கம் தோண்டத் தடை உள்ளிட்ட வேலைகளைத் துவக்கி நன்மங்கலத்தை சூழலியல் சுற்றுலாத் தலமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நடைபெறும் பணிகள்: வனப்பகுதி முழுவதும் பரவியிருந்த அந்நியச் செடிகளும், மரங்களும் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
நமது பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட மரங்களான நீர் மருது, அர்ஜுனா, கிர்னி, அத்தி மரம், அரச மரம் உள்ளிட்டவை சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டு வருகின்றன. மேலும் 7 பெரிய குவாரிகள் இங்கு தடை செய்யப்பட்டதால் அவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் மழை நீர் தேக்கி வைக்க உதவும் நீராதாரங்களாக மாற்றப்படவுள்ளன.
சூழல் சுற்றுலா வசதிகள்: நன்மங்கலம் வனப்பகுதியை வனத்துறையினர் சாகச சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதுவாக ஒரு பகல், ஒரு இரவு வனத்தின் உள்ளேயே தங்கி மரம் ஏறுதல், மலை ஏறுதல், இரவு நேர கேம்பிங் வசதி, மற்றும் இரவில் தகுந்த பாதுகாப்புகளுடன் வனத்துறையினரின் வழிகாட்டுதலுடன் காட்டை சுற்றிப் பார்த்தல். உள்ளிட்ட வசதிகளையும் சேர்த்து மாறுதல் செய்யவுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com