பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தைப் பிடித்த கடலூர்

கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தைப் பிடித்த கடலூர்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதத்தில் இந்தாண்டு முதல் இடத்தை விருதுநகர் தட்டிச் சென்றுள்ளது. ஆனால், தேர்ச்சி விகிதத்தில் 88.74 சதவீதம் பெற்று கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளிலும் கடலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com