மற்றொரு டமால் டுமீல் நாள் காத்திருக்கிறது: உள் மாவட்ட மக்களுக்கான நற்செய்தி

தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்றைய தினம், மற்றுமொரு டமால் டுமீல் நாளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.
மற்றொரு டமால் டுமீல் நாள் காத்திருக்கிறது: உள் மாவட்ட மக்களுக்கான நற்செய்தி


சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்றைய தினம், மற்றுமொரு டமால் டுமீல் நாளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

அருகில் உள்ள மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, கோவை மற்றும் மதுரை, நீலகிரியின் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் பகுதிகளுக்கும் இந்த கோடைத் திருவிழாக் கொண்டாட்டம் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக பல மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது. ஆனால், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் பற்றி மட்டும் கேட்க வேண்டாம். ஏன் என்றால் அதற்கான பதில் ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com