ஈரோடு: கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மருத்துவ துறை ஊழலில் திளைத்து போய் உள்ளதாகவும், கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.