கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. அதிமுக ஆட்சி குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும்.
கர்நாடகாவினர் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்க சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதே காரணம் என்றார்.