திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டகுடிசல் என்ற இடத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டகுடிசல் என்ற இடத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரங்கநாதன், சங்கர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் தப்பிச்சென்றுவிட்டார்.

விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com