பாஜகவினர் உட்பட யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. தமிழகத்தில் மின்வெட்டை போக்க தமிழக அரசைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
யாரை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் பிரதமர் மோடி சந்தித்து வருகிறார் என்றார்.