ரூ.45 கோடி பழைய நோட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

சென்னை கோடம்பாக்க்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய நோட்டுகள், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை கோடம்பாக்க்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய நோட்டுகள், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2 -ஆவது தெருவில் வசிக்கும் தண்டபாணி என்பவர் வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி மதிப்பிலான பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக தண்டபாணி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் இந்தப் பணத்தை மாற்றுவதற்கு கொடுத்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் ஓரிரு நாள்களில் விசாரணையை தொடங்குவார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com