மதுரை: கார்த்தி சிதம்பரம் லண்டனில் ஒளிந்துகொண்டதுபோல், இன்னும் சில நாட்களில் அவரது தந்தை ப. சிதம்பரமும் ஓடி ஒளிந்து கொள்வார் என்று பாஜக தேசிய செயல்ர எச். ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் எச். ராஜா மதுரையில் கூறியதாவது:
சுதந்திர போராட்ட காலத்தில் லண்டனில் “இந்தியா ஹவுஸ்” என்ற கட்டிடம் இருந்தது. அதில், சுதந்திர போராட்ட வீரர்கள் சென்று தங்கி வந்தனர்.
ஆனால், இன்று அந்த புனிதமான கட்டிடத்தில் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள லலித் மோடி, பின்னர், விஜய் மல்லையா தங்கினார். தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப. சிதம்பமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களில் கார்த்தி சிதம்பரம் இப்போதே லண்டனில் ஓடி ஒளிந்து கொண்டார். அடுத்து இன்னும் சில நாட்களில் ப. சிதம்பரமும் ஓடி ஒளிந்து கொள்வார் என்றார்.
மேலும், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். நாமும் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று எச். ராஜா தெரிவித்தார்.