அதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது. மத்திய அரசு ஹைட்ரோகார்பன் மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த கூடாதென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.