சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளிவில் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு அவசரச் சட்டம் கொண்டு வருவது, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடிவு செய்வது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், புதிய தொழில் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகியவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.