சென்னை: வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் தகித்து வந்த நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் தற்போது வெப்பம் சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. காரைக்காலில் இருந்து மசூலிப்பட்டினம் வரை இந்த மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. ஒரு வேளை இந்த மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வந்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.