வேலூர்: பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூலக்கொல்லை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
வறண்டு போயிருந்த பாலாற்றில் திடிரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூலக்கொல்லை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், பாலத்தைக் கடக்க முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.