வேலூர்: வேலூரில் செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் இன்று கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களாகச் செம்மரம் கடத்தல் வழக்கில் சரத் என்ற முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வேலூரில் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து சரத் என்பவரை ஆந்திர போலீசார் வீடு புகுந்து, துப்பாக்கி முனையில் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.