காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளையராஜா 3 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளையராஜா மர்ம முறையில் இறந்து கிடப்பது குறித்து, கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.