புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மையார்பாளையத்திலுள்ள டி.டி.வி. தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பொம்மையார்பாளையத்தில் தினகரனுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் பரப்பில் பண்ணை வீடு உள்ளது. அங்கு வியாழக்கிழமை அதிகாலை முதலே 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது. பண்ணை வீட்டின் காவலாளி கர்ணாவை தனி அறையில் வைத்து, வருமான வரித் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினகரன் எப்போது வந்து தங்குவார், அவரைச் சந்திக்க வருபவர்களின் விவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.