கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள, அதிமுக (அம்மா அணி) மாவட்டச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான மாதேவாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஒசூர் டி.வி.எஸ்., நகரில் வசித்து வருபவர் மாதேவா. இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக(அம்மா) அணியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலராக தினகரன் மூலம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், "ஒசூரில் உள்ள தனியார் வங்கியில் தனது பெயரில் உள்ள சேமிப்புக் கணக்கும், விவேக் எண்டர்பிரைசஸ், பாரத் செக்யூரிட்டி சர்வீஸ் ஆகிய பெயர்களில் உள்ள தொழில்சார்ந்த கணக்கும் முடக்கப்பட்டுள்ளன' என்று மாதேவா தெரிவித்தார்.
மேலும், " வங்கியில் இருந்து தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகள், மூன்று வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்' என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.