மங்களூரு - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 06060: நவம்பர் 12- ஆம் தேதி மங்களூரில் இருந்து இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காசர்கோடு, பயனூர், கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, திரூர், சோரநூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.