ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):
ஏ.அமல்ராஜ் - திருச்சி மாநகர ஆணையாளர் (கோவை மாநகர ஆணையாளர்), ஏ.அருண் - சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையாளர் (திருச்சி மாநகர ஆணையாளர்), கே.பெரியய்யா - கோவை மாநகர காவல் ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையாளர்), ஜி.வெங்கடராமன் - காவல் துறை நிர்வாகப் பிரிவுத் தலைவர் (குடிமைப் பொருள் விநியோகக் குற்றப் பிரிவு தடுப்புத் துறைத் தலைவர்), ஆர். தினகரன்-காவல் நிர்வாக பணியமைப்புத் துறைத் தலைவர் (காவல் துறை நிர்வாகப் பிரிவுத் தலைவர்), சோனல் வி.மிஸ்ரா-காவல் பயிற்சிப் பிரிவு துணைத் தலைவர் (பிற மாநில ஐ.பி.எஸ்., பிரிவில் இருந்து பணிக்கு வந்தவர்). அமநத் மான்-சென்னையில் உள்ள காவல் துறை அமலாக்கப் பிரிவு கண்காணிப்பாளர் (பிற மாநில ஐ.பி.எஸ். பிரிவில் இருந்து பணிக்கு வந்துள்ளார்).