7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):
ஏ.அமல்ராஜ் - திருச்சி மாநகர ஆணையாளர் (கோவை மாநகர ஆணையாளர்), ஏ.அருண் - சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையாளர் (திருச்சி மாநகர ஆணையாளர்), கே.பெரியய்யா - கோவை மாநகர காவல் ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையாளர்), ஜி.வெங்கடராமன் - காவல் துறை நிர்வாகப் பிரிவுத் தலைவர் (குடிமைப் பொருள் விநியோகக் குற்றப் பிரிவு தடுப்புத் துறைத் தலைவர்), ஆர். தினகரன்-காவல் நிர்வாக பணியமைப்புத் துறைத் தலைவர் (காவல் துறை நிர்வாகப் பிரிவுத் தலைவர்), சோனல் வி.மிஸ்ரா-காவல் பயிற்சிப் பிரிவு துணைத் தலைவர் (பிற மாநில ஐ.பி.எஸ்., பிரிவில் இருந்து பணிக்கு வந்தவர்). அமநத் மான்-சென்னையில் உள்ள காவல் துறை அமலாக்கப் பிரிவு கண்காணிப்பாளர் (பிற மாநில ஐ.பி.எஸ். பிரிவில் இருந்து பணிக்கு வந்துள்ளார்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com