உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவியர், அந்த மொழியிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கை மனுவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் அளித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் உருது மொழியில் தேர்வு எழுதும் வழக்கம் ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இஸ்லாமிய மாணவ, மாணவியர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுத மிகவும் சிரமப்படுவதாகவும், இதனால் அவர்களது தேர்ச்சி விகிதம் குறைவதாகவும் அவர் தெரிவித்தார்.