புதுவை அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரௌடியின் கைகள் வெடிவிபத்தில் துண்டிப்பு

பிள்ளைச்சாவடி மீனவர் குடியிருப்பில் வெடிண்டு தயாரித்த புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி கைகள் துண்டானது.
புதுவை அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரௌடியின் கைகள் வெடிவிபத்தில் துண்டிப்பு

பிள்ளைச்சாவடி மீனவர் குடியிருப்பில் வெடிண்டு தயாரித்த புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி கைகள் துண்டானது.

புதுச்சேரி அடுத்த பொம்மையார்பாளையம்  பிள்ளை சாவடியில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இதன் குடியிருப்பில் திங்கள்கிழமை தன் புதுச்சேரி  வாழைக்குளத்தை  சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி வாடகைக்கு சென்றுள்ளார். விடியற்காலையில்  கை வெடிகுண்டை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இரண்டு கை மணிக்கட்டுகள் முழுவதுமாக சேதமடைந்தது.

மேலும் அவரது தொடைப்பகுதி பெரும் காயம் அடைந்தது. இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் அவரை காலாபாட்டில் உள்ள பிம்ஸ் (தனியார் ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்தில சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவி, குழந்தைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்ததால் அவருக்கும் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு ஏன் தயாரித்தார், வேறு ஏதாவது குற்றம் சமபவத்திற்கு வெடிகுண்டு தயாரித்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி கார்த்திக் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, திருட்டு சம்பவகளில் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com