சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு வேதனை அளிப்பதாக தமிழக மீனவர்கள் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் தாக்கவில்லை என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இது குறித்துக் கருத்துக் கூறிய ஜேசுதாஜ், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு கடலில் பாதுகாப்பு இல்லாததைக் காட்டுகிறது. இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்கவில்லை என்று கூறியிருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
மேலும், மீனவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூட ரப்பர் குண்டால் ஏற்பட்ட காயம் என்று கூறியுள்ளார். மீனவர்களை இந்தியில் பேசும்படி மிரட்டியது கடலோரக் காவல்படையினர்தான் என்றும் அவர் தெரிவித்தார்.