கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்: மு.க. அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்: மு.க. அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
 திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
 அதன் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் அவர் ஒதுங்கியிருக்கிறார்.
 இந்நிலையில், கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல், அவரை அடிக்கடி சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகிறார்.
 கருணாநிதியைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரைப் பார்ப்பதற்காகத்தான் சென்னை வந்திருக்கிறேன். அவர் அழைத்தால், மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com