அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி போட்டித் தேர்வு முடிவின்படி, பொறியியல் பாடங்களுக்கு, சென்னை தரமணி ù பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 23 -ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக தற்போது இப்பணி ஒத்திவைக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி உள்ளிட்ட விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.nic.in பின்னர் அறிவிக்கப்படும்.
எனினும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு விழுப்புரத்தில் வரும் 24 -ஆம் தேதியும், மதுரையில் 25 -ஆம் தேதியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டப்படி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.