ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேற்கொண்ட குறுக்கு வழி பலனளிக்கவில்லை. அதிமுக இமயமலை என்பதால் ஆர்.கே. நகர் தேர்தலில் இமாலய வெற்றியை பெறும். ஆர்.கே. நகர் அதிமுக வேட்பாளர் குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவெடுக்கும். 

இரட்டை இலை சின்னம் பெற்ற விவகாரத்தில் மத்திய அரசு ஆதரவு என கூறுவதில் உண்மையில்லை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற தலைமைத் தேர்தல் ஆணைய நடவடிக்கையில் தலையிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

முன்னதாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com