புதுச்சேரி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (எண்.161115, 161116) பெட்டிகளின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது:
போதிய பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் இந்த விரைவு ரயிலில் இருந்த இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி (பதிவு) கொண்ட பெட்டி ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்தும், 31-ஆம் தேதி புதுச்சேரியில் இருந்தும் நடைமுறைக்கு வரும் என்றார்.
இதன் பின்னர் இருக்கும் பெட்டிகள் எண்ணிக்கை விவரம்: இரண்டாம் வகுப்பு பதிவு செய்யப்பட்ட இருக்கை வசதி பெட்டி-1, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 8, சரக்கு மற்றும் பிரேக் வேன் - 2 பெட்டிகள்.