அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுவிட்டாலும், ஆர்.கே.நகரில் வெற்றியைப் பெற முடியாது என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் அதிமுக அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உடனே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையைப் பெற்றுவிட்டாலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். திமுக வேட்பாளரை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்.