பெங்களூரு விடுதி 9-ஆவது மாடியிலிருந்து குதித்து தமிழக பெண் ஓவியர் தற்கொலை

பெங்களூருவை அடுத்துள்ள பகுதியில் இருக்கும் தனியார் விடுதியின் 9-ஆவது மாடியில் இருந்து தமிழக பெண் ஓவியர் திங்கள்கிழமை தற்கொலைசெய்துகொண்டார்.
பெங்களூரு விடுதி 9-ஆவது மாடியிலிருந்து குதித்து தமிழக பெண் ஓவியர் தற்கொலை

பெங்களூரு அடுத்துள்ள மாராதஹள்ளி என்ற பகுதியில் செஸ்னா பிஸினஸ் பார்க்கில் சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது.

இதன் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஓவியர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து வய்ட்ஃபீல்ட் டிசிபி அப்துல் அஹத் கூறியதாவது:

பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த சொகுசு விடுதியின் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் திங்கள்கிழமை காலை 11.15 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.வள்ளியம்மை (வயது 34) என்பது தெரியவந்துள்ளது.

ஓவியரான இவர், ஓவியப் பெட்டகத்துடன் அந்த 9-ஆவது மாடிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் குடும்பதினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் தொடர்பாகவும் அப்பகுதி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பதினர் வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடைபெறும். 

கடந்த 5 நாட்களில் மட்டும் இதே சொகுசு விடுதியில் இதுபோன்று 2-ஆவது தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com