ஆதார் எண் இணைத்தால் மாதம் 12 முறை ரயில் பயணத்துக்கு முன்பதிவு

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்துக்கு 12 முறை ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்துக்கு 12 முறை ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருந்தால்தான் இணையம் வழியாக ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். அப்படி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இப்போது ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆதார் எண்ணை இணைக்கும் பயனாளிகள், இனி மாதம் 12 முறை இணையம் மூலமாக ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com