தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன. 

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன. 
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ,5 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்பாளர் ஆனைவாரி ஆனந்தன், புலவர் கி.த.பச்சையப்பன், பாக்கம் தமிழன், தமிழ் வளர்ச்சி கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com