எல்லை தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட விவகாரங்களால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவர். மேலும் அவர்களிடம் இருந்து விசைப்படகு, வலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்வர்.
இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் 5 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இலங்கையின் காங்கேசந்துறை கடற்படை தடவாளத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்டோபர் 25-ந் தேதி வரை 5 தமிழக மீனவர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த 5 மீனவர்களும் வாவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.