நெடுந்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வர மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வர மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் பாண்டி, முருகன் உள்ளிட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் நெடுந்தீவு - தலைமன்னார் இடையே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை சிறைப் பிடித்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை காங்கேயன் துறைமுகம் அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com