திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருமலையில் உள்ள அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களில் ஆயுதபூஜையை நடத்துவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை காலை திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அன்னதானக் கூடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. விழாவில், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோர் பூஜைகளை செய்தனர். பின்னர் ஊழியர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.